சியபத பினான்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களது வாடகைக் கொடுப்பனவுகளை எந்தவொரு சம்பத் வங்கி அல்லது இலங்கை வங்கியின் பணம் வைப்புச் செய்யும் இயந்திர வலையமைப்பின் மூலம் நாடு தழுவிய ரீதியில் 24 மணி நேரமும், வருடம் முழுவதும் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. இதன்மூலம், சில இலகுவான படிமுறைகளில் உங்களது வசதிக்கேற்ப சிநேகப10ர்வமான முறையில் உங்களது பணம் வைப்புச் செய்யும் சேவையை மேற்கொள்ள முடியும்.
மொழியைத் தெரிவு செய்தல்.
பட்டியல் கொடுப்பனவைத் தெரிவு செய்தல்
நிதி நிறுவனத்தைத் தெரிவு செய்யவும
சியபத பினான்ஸ் குத்தகைக் கொடுப்பனவைத் தெரிவு செய்யவும்
உங்களது தொடர்பு இலக்கத்தைப் பதிவு செய்யவும்
உங்களது இலக்கத்தை பதிவு செய்யவும்
உங்களது 7 இலக்க ஒப்பந்த இலக்கத்தை இரண்டு தடவைகள் பதிவு செய்து CONFIRM பொத்தானை செய்யவும்.
உங்களது தேஅஅ இலக்கத்தை பதிவு செய்யவும்
பணம் செலுத்துவதற்காக பணத்தைச் செருகவும்
கொடுப்பனவை உறுதிப்படுத்தி, உங்களுக்கான பற்றுச்சீட்டைப் பெற்று பிற்குறிப்புகளுக்காக வைத்திருக்கவும்.
பரிவர்த்தனைகளைத் தெரிவு செய்யவும் –> அட்டையின்றிய கொடுக்கல் வாங்கல்கள்
மொழியைத் தெரிவு செய்தல்.
பற்றுச்சீட்டு தேவையா -> YES ஐ அழுத்தவும்.
பரிவர்த்தனையைத் தெரிவு செய்யவும் -> அட்டையின்றிய வைப்பு
கணக்கு இலக்கத்தை இரண்டு முறை பதிவு செய்து CORRECT என்ற பொத்தானை அழுத்தவும்.
கணக்கு விபரங்களை கவனமாக வாசித்து CONFIRM மூலம் உறுதிப்படுத்தவும்.
அதன் பின் பண வைப்புத் தட்டு திறக்கப்படும். தயவு செய்து, அதில் பணத்தை வைத்து பின்வரும் பொத்தானை கவனமாக அழுத்தவும். (பணம் வைப்புச் செய்யப்பட்டதும் இந்தப் பொத்தானை அழுத்தவும்)
அதன் பின் நீங்கள் பணம் எண்ணப்படும் ஒலியை உணர்வீர்கள். எண்ணப்பட்ட தொகையை இயந்திரம் உங்களுக்கு தனித்தனி நோட்டுக்களில் காண்பிக்கும்.
நீங்கள் வைப்புச் செய்த தொகை இயந்திரம் காட்டும் தொகையுடன் பொருந்தினால் OK பொத்தானை அழுத்தவும்.
உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக, உங்களது 10 இலக்க தொலைபேசி இலக்கத்தைப் பதிவு செய்யவும் - இது, சியபத பினான்ஸின் குத்தகை ஒப்பந்தம் பெற்றவரின் தொடர்பு இலக்கமாக இருக்க வேண்டும்.
உங்களது தே.அ.அ இலக்கத்தை உட்செலுத்தவும். இது, சியபத பினான்ஸில் குத்தகை ஒப்பந்தம் பெற்றவரின் தே.அ.அ இலக்கமாக இருக்க வேண்டும்.
இறுதியில் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளவும். அதிலுள்ள தகவல்கள் யாவும் சரியானவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
சியபத பினான்ஸின் வாடகைக் கொடுப்பனவுகளை உங்கள் விரல் நுணிகள் மூலம் சம்பத் விஷ்வ மொபைல் பிரயோகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும். சம்பத் விஷ்வ என்பது, சம்பத் வங்கியின் தலைசிறந்த ஒரு இணையத்தள வங்கிச் சேவையாகும். உங்களுக்கு முழுமையான ஒன்லைன் பாங்கிங் அனுபவத்தை பெற்றுத் தரும், வேலைப்பழு மிக்க வாழ்க்கைக்கு மிகவும் உகந்ததொரு தீர்வாகும்.
குறிப்பு : ஏழு இலக்க வாடிக்கையாளர் அடையாள இலக்கத்தை குறிப்பு எண்ணாகக் குறிப்பிட வேண்டும்.
விஷ்வ ஒன்லைன் பாங்கிங் பிரயோகத்தில் நுழைந்து உங்களது பயனாளியின் அடையாளம் (User ID) மற்றும் இரகசியக் குறியீடு என்பனவற்றைப் பதிவு செய்யவும்.
தெரிவு செய்யவும் - 'பணம் செலுத்து' தெரிவு –> வகை –> புதிய பணம் பெறுபவர்
தெரிவு செய்யவும் - சியபத பினான்ஸ் –> குத்தகைக் கட்டணங்கள்
7 இலக்க ஒப்பந்த அடையாள இல.–> பயனாளியின் சேமிப்புக் கணக்கு இல. –> தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடவும் –> பெறுநரின் தகவல்கள்
Confirm என்ற பொத்தானை அழுத்தி தகவல்களை உறுதிப்படுத்தவும்.
Submit என்ற பொத்தானை அழுத்தி, பின்னர் நீங்கள் உட்செலுத்திய தகவல்களை ஒரு Screenshot ஆகப் பெற்றுக்கொள்ளவும்.
சியபத பினான்ஸின் கடன் அறவீடுகள் அதிகாரிக்கு இந்த screenshot ஐ அனுப்பி வைக்கவும்.
சியபத பினான்ஸின் வாடகைக் கொடுப்பனவுகளை, உங்கள் வசதிக்கேற்ப, இணைய தள வங்கிச் சேவைகள் மூலம, வீடுகளில் இருந்தவாறே மேற்கொள்ளலாம். வீடுகளில் இருந்தோ அல்லது வேலைத் தளங்களில் இருந்தோ மிக இலகுவாக நாளின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும, எந்தவொரு நேரத்திலும் உங்கள் வசதிக்கேற்ப கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வாய்ப்பை இந்த டிஜிட்டல் பாங்கிக் சேவை உங்களுக்குப் பெற்றுக் கொடுக்கிறது.
குறிப்பு : ஏழு இலக்க வாடிக்கையாளர் அடையாள இலக்கத்தை குறிப்பு எண்ணாகக் குறிப்பிட வேண்டும்.
சியபத பினான்ஸின் கொடுப்பனவுகளை, இலங்கையின் எந்தவொரு வங்கியிலிருந்தும் மாதாந்தம் மேற்கொள்ள முடியும். தன்னிச்சையாக செயற்படும் வகையில் நிலையான கட்டளை ஒன்றை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வங்கி உங்கள் கொடுப்பனவுகளை நினைவில் வைத்திருந்து செயற்படுத்தும். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தலாம்.
குறிப்பு : ஏழு இலக்க வாடிக்கையாளர் அடையாள இலக்கத்தை குறிப்பு எண்ணாகக் குறிப்பிட வேண்டும்.